ஐ.நா.வில் மீண்டும் உயர்ந்த அநீதியின் இரத்தம் தோய்ந்த கரம் !

ஐ.நா.வில் மீண்டும் உயர்ந்த அநீதியின் இரத்தம் தோய்ந்த கரம் !

இரத்தம் தோய்ந்த அநீதியின் கை ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் உயர்ந்தது. #FreePalestine அமைரிக்கா மீண்டும் ஒருமுறை காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ செய்துள்ளது, அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பிரயோகிக்காமல் இருந்திருந்தால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கும். எத்தனையோ அப்பாவி குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் வாக்கெடுப்பு 14-1 ஆக இருந்தது, அமெரிக்க தூதர் டோரதி ஷியா மட்டுமே எதிராக வாக்களித்தார். பாலஸ்தீனத்தில் தற்போதைய இனப்படுகொலை அலை தொடங்கியதிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை ஐந்தாவது தடவையாக போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், இத் தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் கையாலாகாத் தனம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமைதிக்கான மத்தியஸ்த சபை அல்ல. அதுவொரு கூட்டு குற்றத்தினை சட்டபூர்வமாக்குவதற்கான சபையாகும் என்பது மீண்டும் தெளிவாகி உள்ளது