இலங்கையில் பேனைத் துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு.

பேனயைப் போன்று தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பேனை துப்பாக்கி சுமார் நான்கரை அங்குல நீளம் கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், களுத்துறை குற்றப்பிரிவு போலீசார் நேற்று மாலை பாணந்துறை ஹொரேதுடுவ பாலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை சோதனை செய்தபோது இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டது .
சந்தேக நபரின் பாக்கெட்டில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பேனை துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இந்த துப்பாக்கி பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
சந்தேகநபர் இந்த துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார் என்பது குறித்து களுத்துறை குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர் ,