ஏட்டிக்கு போட்டியாக தொடரும் போர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து இஸ்ரேலுக்கு தனது ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
24- ஆகாயத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை டிரம்ப் இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளார்.
எனினும் இஸ்ரேலுக்கு புரியும் மொழியில் ஈரான் 4-வது நாளாக பேசி வருகிறது.
தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பொருளாதார நகரமான ஹைபா (Haifa) மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதலை தொடுத்து வருகிறது.
தனது வான்வழி அமைப்புகள் கட்டுக் கோப்பாக செயல் படுவதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் காஸாவையும், ஏமன் நாட்டை தாக்கும் போது அமைதியாக வேடிக்கைப் பார்த்த ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் , இப்போது இஸ்ரேல் அடி வாங்கும் போது போர் அபாயம் குறித்து விரிவுரை ஆற்றுவது வேடிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்துக் கொள்வது அவர்களது உரிமை. தான் மட்டுமே அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும், லேசர் ஆயுதங்களையும் வான்வெளி தாக்குதல் மையங்களையும் வைத்துக் கொள்வேன் என்பது எவ்வாறு சரியாகும்.
காஸாவில் உணவுக்காக காத்திருப்போரை கொள்வதும், மருத்துவமனை பள்ளிக்கூடங்களில் குழந்தைகளையும் கொன்ற
இஸ்ரேலை ஆதரிக்கும் கயமையை என்னவென்று சொல்வது?
காஸா 55,000 பேருக்கு மேல் இஸ்ரேல் கொன்றது. காஸாவிற்குள்
தண்ணீரும், உணவு செல்வதை குண்டு வீசி தாக்கி அழிக்கும் பாசிச நெதன்யாகுவை ஆதரிப்பவர்களின் மனோநிலையை என்னவென்பது?
கடந்த 13.06.2025 அமைதியாக இருந்த ஈரான் நிலைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்து விஞ்ஞானிகளையும், இராணு தளபதிகளையும் கொன்ற இஸ்ரேலின் கயமைத்தனத்தை, இராணுவ அராஜகத்தை தட்டி கேட்க வேண்டாமா?
அன்றைய தினமே அப்பாவி ஈரான் மக்களை (ஒரே நாளில் 78 பேரை) கொன்ற இஸ்ரேலின் அடாத செயலை உலகம் ஏற்கிறதா?
இஸ்ரேல் என்ற உலக பயங்கரவாத நாட்டை உலக மக்கள் எதிர்க்க வேண்டும். பாசிச நெதன்யாகுவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய மக்களும், அமெரிக்க மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்.
இஸ்ரேலின் பொருளாதார நகரமான Haifa (ஹைபா)-வை 4-வது நாளாக ஈரான் தாக்கி வருகிறது.
இஸ்ரேலுக்கு புரியும் மொழியில் அழுத்தமாக ஈரான் பேசி வருகிறது.