அக்குறணை பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் இஸ்திஹார் பதவியேற்பு.
1.
ஐக்கிய மக்கள் சக்தியின் (உள்ளூராட்சி மன்றம்) உறுப்பினர்களுக்கான பதவியேட்பு விழா
ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்டம் ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கான உள்ளூராட்சி மன்றங்களாகிய அக்குறணை ,ஹாரிஸ்பத்துவ ,பூஜபிட்டிய் ஆகிய இந்த பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கான பதவியேட்பு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் மற்றும் ஹாரிஸ்பத்துவ (SJB) அமைப்பாளர் அப்துல் ஹலீம் அவர்களது தலைமையில் கிங்ஸ் கோர்ட் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேட்பு விழா நடைபெற்றதுடன் இந்நிகழ்வுக்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கண்டி மாவட்டம் உட்பட ஹரிஸ்பத்துவவின் ஐக்கிய மக்கள் சக்திக்கான இந்த வெற்றி பயணத்தை இம்முறை தேர்தெடுக்கபட்ட அனைத்து உறுப்பினர்களும் தனக்கான பொறுப்பை சிறந்த முறையில் செய்வதும், மக்கள் மயமான சேவை ஒன்றை பிரதேச சபையினூடாக வழங்குவதும் ; எமது ஒரே இலக்காகும்!